Wednesday 28 January 2015

எதுகை மோனை தேவையில்லாத் தமிழ் மரபுக்கவிதைகள்.

நன்றி-www.heavyquestions.com

மரபுக்கவிதைகள் என்றாலே எதுகைக்கும் மோனைக்கும் அலைதல் ஒரு புறம் என்றால், பெரும்பாலான கவிதைகளில் கவிதாசிரியர் அப்படித்  தேடிப்பிடித்து இடுகின்ற எதுகை மோனைகள் அடைக்க முடியாத பெட்டியில் துருத்தித் தெரியும் அழுக்குத் துணி போலக் காட்சியளிப்பதைச் சாதாரண வாசகரால் கூட உணர முடியும்.

Tuesday 20 January 2015

நூறாண்டுக்கு முற்பட்ட கடிதமும் ஒரு பூட்டின் சாவியும்.

திருக்குறளில் 135 அதிகாரங்களோடு ஒரு சுவடி பிரான்சில் இருப்பதாக ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக கவிஞர். பாரதிதாசன் அய்யா அவர்கள் திருக்குறள் கற்பிதங்கள் பதிவின் பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அப்படி ஒரு சுவடி அது எந்த நூலகத்தில் இருக்கிறது என்றெல்லாம் அந்த ஆய்வாளர் குறிப்பிடவில்லை போலும். திருக்குறள் 133 அதிகாரங்களை உடையது என்பது ஏறக்குறைய பத்து நூற்றாண்டுகளாய் நிலைபெற்ற கருத்தே எனினும் பிரான்சில் அப்படி ஒரு சுவடி 1350 குறட்பாக்களோடு இருந்தால் நிச்சயம் அதுவும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ட பின்தான் அவை மிகைப்பாடல்களா என்பது தெளிவுபடுத்தப் படவேண்டும்.

Friday 9 January 2015

மதிப்புரை என்னும் மண்ணாங்கட்டி.



 இது நாவலல்ல; பள்ளிக்கூட மாணவன் காம்போஸிஷன்.“ ஒரு நாவலின் விமர்சனம் இந்த ஒரு வரியில் முடிவடைகிறது. இது ஸ்வாமி சுத்தானந்த பாரதியாரால் எழுதப்பட்ட ’புதுமையும் பழைமையும்’ எனும் நூலைப்பற்றிய மதிப்புரை. (வெளியீடு-அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா பக்கம் 112, விலை. 8 அணா )
இதுமட்டுமல்ல ….இன்னும் இருக்கிறது.

ஸ்ரீ டி.பி. கிருஷ்ணசாமி என்னும் ஆங்கில ஆசிரியர் ‘நீதிநூற்பத்து‘ என்ற தலைப்பில் பத்து பண்டை தமிழ் நீதி நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு பக்கம் தமிழ் மூலமும் மறுபக்கம் ஆங்கில மொழி பெயர்ப்புமாக வெளியிட்டிருந்தார். அதற்கான மதிப்புரையின் சிறுபகுதிகள் தான் கீழ்க்காண்பவை,

Saturday 3 January 2015

யாப்புச் சூக்குமம் IV [ விருத்தத் தூண்டில். ]


வலைத்தளம் கொலைக்களமாக மாறும் முன் இந்தத் தொடர்பதிவை முடித்து விட வேண்டும் என்று தோன்றுகிறது. கம்பன் சொல்லுவானே,

''ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன்'' 

என. அப்படி நானும் ஆசை பற்றி அறையலுற்ற இந்த யாப்புச்சூக்குமத்தின் சாவியை உங்கள் கையில் கொடுத்துவிட்டு, முற்றும் போட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.

( என்ன மணவை ஜேம்ஸ் அய்யா………………….சந்தம் வண்ணம் எல்லாம் வேணுமா? )

மரபுக் கவிதைகளுக்கும் புதுக்கவிதைகளுக்கும் உள்ள வித்தியாசம் இந்த ஓசைதான். தமிழின் இந்த ஓசை லயம் மரபுக் கவிதைகளை மனப்பாடம் செய்வித்தது. அரங்குகளின் கடகட எனப் படிக்கப்படும் போது கைதட்டல் பெற்றுத் தரக் காரணமானது.

இதுவரை இந்த யாப்புச்சூக்குமத்தில் திறந்த கதவுகளைக் கண்டிருந்த நீங்கள் இனி கண்படும் எந்தக் கதவையும் திறக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.