Wednesday 30 December 2015

ஜல்லிக்கட்டு - எப்படித் தோன்றியது தெரியுமா?



நம் தொன்மரபின் தொடர்ச்சி நம் தலைமுறையோடு முடிந்துவிடுமோ என்ற கவலையுடன் கட்சி வேறுபாடின்றித் தமிழகமெங்கும் உரத்தொலிக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக்குரல்களைப் பார்வையாளனாக இருந்து பார்த்த என்னை, மதிப்பிற்குரிய திரு. ஞானப்பிரகாசம் ஐயாவின் இருபதிவுகளும் தற்போது அவர் எனக்கு இது குறித்துத் தனியே விடுத்திருந்த மின்னஞ்சலும் இப்பதிவினை எழுத என்னை இழுத்து வந்திருக்கின்றன.

Friday 18 December 2015

எது கவிதை?


‘தமிழகத்தில் மக்கள் தொகையை விடக் கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம்’ என்பதாக என்றோ வாசித்த துணுக்கொன்று இப்போது நினைவுக்கு வருகிறது. இணையத்தில் இயங்கத்தொடங்கிய இந்தக் குறுகிய காலத்தில், எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் கவிஞர்களாய்த் தெரிகிறார்கள். ஒருவேளை ‘காமாலைக்காரன் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்’ என்று கூறுவதுபோல என் கண்களுக்குத்தான் இப்படிப்படுகிறதோ என்னமோ?

Tuesday 15 December 2015

சமணம் – 6; குளிரும் சூரியனும் கொதிக்கும் வெண்ணிலாவும்!



சமணம் பற்றிய தொடர்பதிவின் ஐந்தாம் பகுதியை எழுதி ஐந்து மாதத்திற்குப் பிறகு இதன் தொடச்சியை எழுதுவதால் ஒரு பருந்துப்பார்வையில் இதற்கு முன் சமணம் பற்றிய இடுகைகளில் கூறப்பட்ட செய்திகளைத் தொகுத்துப் பார்த்துவிடலாம்.

Sunday 13 December 2015

ரக்ஷிதாவின் கண்களில் இருந்து.....!


வெள்ளம்
வாசம் பிடித்து வருகின்ற வேட்டை நாயைப்போல
எங்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது,

Monday 7 December 2015

கங்கங்கங்கங்கங்கங்கம்; தமிழ்தாங்க! இதன் பொருள் தெரிகிறதா?


கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. தட்டச்சுப் பழகுபவர்கள் அடித்துப் பழகும் எழுத்துகளைப் போலத்தான் முதற்பார்வைக்குத் தோன்றுகிறது.

Wednesday 2 December 2015

எங்கிருந்தாலும் வாழ்க.

ஈரமுலர்ந்த  மணல்வீடொன்றின் கலைந்துதிரும் ஆயிரமாயிரம் துகள்களின்  மிச்சமிருந்தன, வனைந்த கரங்களால் இணைந்த கனவுகள். அலை ஆரத்தழுவி அத்தனையும் உட்செரித்த  பேராழங்களில் உவர்மண்ணாய்க் கிடந்தவோர் நாளில் திடீரென நினைவு வந்தது,…. அன்று அவனை அறியாமல் அகன்றுபோன அவளது பிறந்தநாள்…….!